Home செய்திகள் இந்தியா ONGC ஆலையில் பயங்கர தீ விபத்து !

ONGC ஆலையில் பயங்கர தீ விபத்து !

310
0
Share

குஜராத் மாநிலம் சூரத்தில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான ஆலை உள்ளது. இதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு காரணம் எரிவாயு குழாயில் ஏற்பட்ட அதிக அழுத்தம் என்று தெரிவிக்கின்றனர்.

இக்காரணத்தினால் அடுத்தடுத்து 3 குழாய்கள் வெடித்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து வெடித்து அதன் காரணத்தினால் ஓஎன்ஜிசி ஆலை முழுவதும் தீ வேகமாக பரவியது.
தீ பரவிய தொடங்கியவுடன் அனைத்து தொழிலாளர்கள் வெளியேற்ற பட்டனர்.

இதனை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்த முயற்சியில் ONGC ஆலை அதிகாரிகளும் விரிவாக அழுத்தத்தை குறைத்து தீயை அனைக்க உதவினர்.

சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி – நிப்டி 4 நாட்களில் 600 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்திற்கு கீழ் சென்றது

இந்த விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் தவான் பட்டேல் கூறியிருப்பதாவது :
ONGC ஆலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று முறை எரிவாயு குழாய் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்தவித சேதமும் ஏற்படாமல் காப்பாற்றிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here