Home செய்திகள் இந்தியா அனைத்து இனமும் சமம் ! ஆதரவாக நின்றிகும் கூகுள் – சுந்தர் பிச்சை

அனைத்து இனமும் சமம் ! ஆதரவாக நின்றிகும் கூகுள் – சுந்தர் பிச்சை

486
0
sundar pichai
Share

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவரை போலீசார் கொன்றதால் பல்வேறு   போராட்டங்களும், கலவரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு மிகுந்து பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
மினசோட்டா தலைநகரான மினியாபொலிசில் கள்ளநோட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடத்தும்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் என்ற நபர் போலீசாரின் பிடியில் உயிரிழந்துள்ளார்.
இந்த இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் தீயாய் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு மிகுந்த பதட்டமான சூழல் வருகிறது. பல இடங்களில் கலவரமானதை  அடுத்து 16 மாகாணங்களிலுள்ள 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்து வருகின்றனர்.
வெள்ளை மாளிகையின் அருகிலும் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக  முதன் முறையாக வெள்ளை மாளிகையின் விளக்குகள் அனைத்தும் முற்றிலும் அணைக்கப்பட்டு, அப்பகுதியே இருளில் மூழ்கியுள்ளது.
தற்போது, சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்போம்  எனக் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை,  ஒடுக்கப்பட்ட இனத்தவருக்காகக் கூகுள் எப்போதும் துணை நிற்கும். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயம் ஆகியவற்றை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை.
இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவையும், கருப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாகவும் இதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here