Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் இன்ஜினியரிங்-ல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு…

இன்ஜினியரிங்-ல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு…

570
0
anna university
Share

பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் அனைவருக்கும் இறுதியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பில் 2000 ஆண்டு முதல் 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருக்கும் அனைவரும் இதனைப் பயன்படுத்திச் சிறப்புத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புத் தேர்வு ஏற்கனவே டிசம்பர் மாத பருவ தேர்வுடன் நடைபெற்றது அதேபோல் ஏப்ரல் மாத பருவ தேர்வின் போது நடத்தத்  திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பால் இந்த பருவ தேர்வு நடத்தப்படவில்லை எனவே இந்த சிறப்புத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளி வந்துள்ளது: அதில் கொரோனா  தாக்கம் குறைந்த பிறகு அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட உடன் பருவத் தேர்வு நடைபெறும் அவ்வாறு நடைபெறும் போது இந்த சிறப்புத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. யாராவது இந்த சிறப்புத் தேர்வு எழுத விரும்பினால் www.coe1annauniv.edu என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து விண்ணப்பித்துக் கொள்ளவும். ஏற்கனவே இந்த சிறப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தால் தாங்கள் மீண்டும் தேர்வு கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here