Home ஆன்மீகம் வாஸ்து குறைகளுக்கு எளிய பரிகாரமுறைகள்..

வாஸ்து குறைகளுக்கு எளிய பரிகாரமுறைகள்..

443
0
Share

கஷ்டங்கள் விலகி நினைத்த காரியம் நடக்க சில எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் தீபம் ஏற்ற முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

ஆனால் தீபத்தில் உள்ள எண்ணெய் மட்டும் எரிய வேண்டுமே தவிரத் திரி எறியக்கூடாது. எப்போதுமே திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றைக் கிழக்குப் பார்த்தபடி மாட்டி வைத்தால், அது வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் சிறிது சிறிதாக விலகும்.

செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. அமாவாசை, பவுணர்மி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here