Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு ! அதிகமாகும் பலி எண்ணிக்கை..

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு ! அதிகமாகும் பலி எண்ணிக்கை..

494
0
covid 19
Share

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன வைரஸ் நோயால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது என்பது நிம்மதி அளிக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் நாள் ஒன்றுக்கு 7000, 8000 வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. தற்போது 5000 – 6000 க்குள் அடங்கியுள்ளது.

இது சற்று ஆறுதல் அளித்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 100 அதிகமானோர் இந்த வைரசால் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4241 ஆக உயர்ந்துள்ளது. என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5609 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 263,222 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here