Home செய்திகள் இந்தியா கொல்கத்தாவில் சக்தி வாய்ந்த வெடி விபத்து!.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!…

கொல்கத்தாவில் சக்தி வாய்ந்த வெடி விபத்து!.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!…

332
0
Kolkata Powerful Explosion
Share

கொல்கத்தாவின் பெலகாட்டா பகுதியில் இன்று காலை ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விவரங்களின்படி, சக்திவாய்ந்த வெடிப்பு பெலகாட்டா காந்திமத் நண்பர்கள் வட்டம் கிளப்பின் மாடியின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டவுடனேயே உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கிளப்ஹவுஸுக்குச் சென்று மாடியில் ஒரு பகுதி வெடித்துச் சிதறியதைக் கண்டார்கள். கிளப்ஹவுஸின் சுவரும் ஓரளவு உடைந்தது.

உள்ளூர் வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்ததும் பெலகாட்டா காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தனர். கொல்கத்தா காவல்துறையின் புலனாய்வு பிரிவு மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுவிற்கும் இந்த தகவல்கள் வழங்கப்பட்டன.

உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை!.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி!…

குண்டுவெடிப்புக்குப் பிறகு, கிளப்புடன் தொடர்புடைய சிலர் இரண்டு மாடி கிளப்ஹவுஸில் ஒரு எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினர். ஆரம்பத்தில், எரிவாயு சிலிண்டர் வெடிப்பிற்குக் காரணம் என்று யூகிக்கப்பட்டது.

இருப்பினும், உள்ளூர் மக்களில் பெரும் பகுதியினர், தங்கள் அடையாளங்களை மறைத்து கூறுகையில், கிளப்பில் எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என்று தெரிவித்தனர். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலரை என்ஐஏ கைது செய்திருந்த நிலையில், உள்ளூர் மக்கள் சிலரின் கருத்துக்களால், இது குறித்த பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

எனினும் போலீஸ் வட்டார தகவல்களின்படி, குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குண்டுவெடிப்பினால் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here