Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் மின் கட்டணம் செலுத்தச் சலுகை ! நீதிமன்றம் உத்தரவு..

மின் கட்டணம் செலுத்தச் சலுகை ! நீதிமன்றம் உத்தரவு..

341
0
EB
Share

சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வீடுகளிலும் மின் கணக்கீடு ஏதும் கணக்கிடப்படவில்லை. அதற்குப் பதிலாக மின் பகிர்மான கழகமானது முந்தைய மாத கால பயனீட்டு கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. பின்னர் இரண்டு தற்போது நான்கு மாதங்களில் ஆகிய நிலைகளில் தற்போது கணக்கீட்டில் கட்டணம் ஆனது மொத்தமாகக் கணக்கிடப்பட்டது.

அது மட்டுமின்றி இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் இலவசமாக இவ்வளவு காலம் வழங்கியது. தற்போது அது வழங்கப்படாததால் மின்கட்டணம் அதிகமானது. இதனால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர். இதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அதற்குப் பதிலாகச் சென்னை உட்படத் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தாளும் இந்த மாத இறுதி வரை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் செலுத்தும்படி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சற்று கால அவகாசம் சலுகை கிடைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here