Home செய்திகள் இந்தியா நாளுக்கு நாள் புது உச்சம் ! கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 2 லட்சம் …

நாளுக்கு நாள் புது உச்சம் ! கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 2 லட்சம் …

317
0
covid 19
Share

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடுகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு  எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் 2வது இடம். நாளுக்கு நாள் புது உச்சம் என்ற கணக்கில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் 6,785 பேருக்கு உறுதியாகி உள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சம் வரை நெருங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் குறைவு தான்.

மற்ற மாவட்டங்களில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்த  கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 92,206 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 88 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் சேர்த்து 3,320 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6,504 பேர் குணமாகி உள்ளார்கள் என்றும் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65,150 பேருக்குக் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டதாகச் சுகாதாரத் துறை கூறுகிறது. இப்படியே சென்றால் மற்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here