Home செய்திகள் இந்தியா இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 குறித்து ஒப்பந்த பேச்சுவார்த்தை !

இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 குறித்து ஒப்பந்த பேச்சுவார்த்தை !

1439
0
Share

அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 2018-ம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளும் இரண்டுக்கு இரண்டு (‘2 பிளஸ் 2’) தொடர்பாக பேச்சுவார்த்தை ஒவ்வொரு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று (27-10-2020) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

அவர்களுக்கு ராணுவ முறைப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமெரிக்க மந்திரிகள் 2 + 2 குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் 2+2 பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு வர்த்தகம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

மேலும் லடாக்கில் சீனாவுடனான எல்லை பதற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் போன்ற பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாட்டிலைட் தரவுகளை பங்கிடுவது குறித்து ஒப்பந்தம், ராணுவ தளவாட ஒப்பந்தம் போன்றவற்றை குறித்து இந்த சந்திப்பின் மூலம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here