Home செய்திகள் இந்தியா ரசிகர்கள் இல்லாமல் IPL ! காலி மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி…

ரசிகர்கள் இல்லாமல் IPL ! காலி மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி…

447
0
Corona IPL
Share

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நடக்கவிருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் காலி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Rain T20நேற்று இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையில் முதல் ஒரு நாள் போட்டி நடக்கவிருந்தது. தர்மசாலாவில் நடக்கவிருந்த இந்தப் போட்டி மழை காரணமாக நடக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ தரப்பிலிருந்து இந்த அறிவிப்பு வெளியானது.

India VS South Africaசீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனாவே இந்நிலைக்குக் காரணம். இதுவரை இந்தியாவில் 74 பேருக்குக் கொரானா பாதிப்பு உறுதியானது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் கருதி இந்த முடிவை அரசு அமைப்புகள், விளையாட்டுத் துறை அமைச்சகம், சுகாதாரத் துறையுடன் கலந்து பிசிசிஐ எடுத்துள்ளது.

தர்மசாலாவில் மழை காரணமாக முதல் போட்டியைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Corona IPL

இதைத் தொடர்ந்து IPL கிரிக்கெட் தொடரையும் இதே போல் ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாமா அல்லது வேறென்ன செய்யலாம் எனப் பேசி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் என்ன அறிவிப்பு வரப்போகிறதோ என்று அதிர்ச்சியில் காத்திருக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here