Home செய்திகள் இந்தியா வைரலான திருப்பூர் போலீஸ் ட்ரோன் வீடியோ…

வைரலான திருப்பூர் போலீஸ் ட்ரோன் வீடியோ…

910
0
Share

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை  போலீசார்  ட்ரோன் வைத்து பிடித்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரிக்கின்றனர். மேலும் இந்த வீடியோக்கள் இணையத்தளத்திலும் வைரலாகிறது.drone view

தமிழ் நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் எல்லாம் வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து வெளியே தேவையில்லாமல் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்களா என போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.carrom guy

தற்போது திருப்பூர் மாவட்ட போலீசார் ட்ரோன்கள் மூலம்  மக்கள் கூடுவதையும் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு திருப்பூர் மாவட்ட போலீசார் ட்ரோன் ஒன்றைப் பறக்கவிட்டு கண்காணித்த போது ஒரு மரத்தடியில் கும்பலாகச் சிறுவர்கள் சிலர் நின்றுகொண்டு கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களை படம் பிடிக்க ட்ரோன் அவர்கள் அருகில் சென்ற போது அந்த சிறுவர்கள் போலீசார் கண்காணிப்பதைக் கண்டு  பயந்து தெரிந்து ஓடினர். அதில் ஒரு சிறுவன் மட்டும் மீண்டும்  வந்து கேரம் போர்டை எடுத்துக்கொண்டு ஓடினான். ட்ரோன் அவனைத் துரத்தித் துரத்தி படம் பிடித்து வந்தது இந்த வீடியோக்கள் எல்லாம் டப்பிங் செய்து  காமெடி வீடியோக்களாக மாறி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here