Home செய்திகள் இந்தியா சூப்பர்ஸ்டாருக்கே அபராதம் விதித்த போலீஸ்…

சூப்பர்ஸ்டாருக்கே அபராதம் விதித்த போலீஸ்…

457
0
Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்குச் செல்ல வேண்டுமானால் e – பாஸ் என்ற ஒரு திட்டத்தைத் தமிழ் நாட்டில் கொண்டுவந்தனர்.

இந்த திட்டத்தின் மூலம் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ அவசரம் போன்றவற்றிற்கு ஆன்லைன் வாயிலாக e-பாஸ் விண்ணப்பித்துப் பெற வேண்டும். ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் காவலர்களால் சோதனை செய்த பிறகு அவர் வேறு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

இப்படி இருக்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் அவரது பண்ணை வீட்டிற்குச் செல்வதற்காக மருத்துவ அவசரம் என்று கூறி e -பாஸ் விண்ணப்பித்திருந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது அவர் பற்றி மேலும் ஒரு புகார்  வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் இதற்கு முன்பு ஜூன் மாதம் 20ஆம் தேதி இவர் இதே போல் கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்குச் செல்லும்போது சென்னை மாநகர எல்லையைத் தாண்டியதும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் தாழம்பூர் என்ற சோதனைச்சாவடியில் போலீசாரால் இவரைக் காருடன் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இவரை சீட் பெல்ட் அணிய வில்லை என்று கூறி 100 ரூபாய் அபராதம் விதித்திருந்தார்களாம்.

அந்த அபராதத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என்று தெரியவந்தது. ஏனென்றால் தற்போது e – பாஸ் வழங்க ஆன்லைனில் பரிசீலனை செய்யும்போது இவர் ஏற்கனவே அபராத தொகையை செலுத்தாததன் காரணமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது. பின்பு இந்த அபராதத் தொகையைச் செலுத்திய பிறகு இவருக்கு e -பாஸ் அளிக்கப்பட்டது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here