Home செய்திகள் இந்தியா நாளை கரையைக் கடக்கும் சூப்பர் புயல் அம்பன் ! பாதிப்பு குறித்து அச்சம் ….

நாளை கரையைக் கடக்கும் சூப்பர் புயல் அம்பன் ! பாதிப்பு குறித்து அச்சம் ….

471
0
chennai
Share

1999-ம் ஆண்டிற்குப் பிறகு வங்காள விரிகுடாவில் சூப்பர் புயலாக அம்பன் புயல் உருவெடுத்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கடலில் உள்ள  புயல் காற்றின் வேகம் 200-240 கி.மீ. உள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. மேலும் மேற்கு வங்கத்தில் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 110-120 கிமீ வேகமும், அதிகபட்சமாக 135 கிமீ வேகம் வரை காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே நாளை மாலை ஆம்பன் புயல் கரையைக் கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தற்போது இது, சூப்பர் புயலாக உருவெடுத்து, வடக்கு நோக்கி நகர்ந்தபடி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே, நாளை மாலை ஆம்பன் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம். அதேநேரம், சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
மேற்கு வங்கம்  கடற்கரையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தற்போது ஆம்பன் புயல் நிலை கொண்டுள்ளது. மத்திய வங்கக் கடல், மேற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்போடு  காணப்படும். நாளை புயல் கரையைக் கடக்கும்போது அதன் பாதிப்பு மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் ஒடிசாவிலும் தாக்க வாய்ப்புள்ளது. ஆம்பன் புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக 135 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும்’ என்றும்  தெரிவித்துள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here