Home செய்திகள் இந்தியா சர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங் ! எப்படி தெரியுமா ?

சர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங் ! எப்படி தெரியுமா ?

653
0
Share

சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் தென் கொரிய நிறுவனமான சாம்சங் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
2020 ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்திருப்பதாக கவுண்ட்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்திய சந்தையிலும் சாம்சங் தான் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் சாம்சங் நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்றிறுக்கிறது. இத்தகைய பங்குகளை பெற்ற முதல் நிறுவனம் சாம்சங் தான் என கவுண்ட்டர் பாயிண்ட் தெரிவித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ஹூவாய் நிறுவனம் 16 சதவீத சரிவை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு பொருளாதார நெருக்கடியில் இருந்து சாம்சங் நிறுவனம் மீண்டுள்ளதாக தெரிகிறது. இந்திய சந்தையில் ஆன்லைன் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியது மற்றும் இந்தியர்கள் மத்தியில் சீனா பொருட்களுக்கு எதிரான மனநிலை போன்ற பல்வேறு காரணங்களால், சாம்சங் விற்பனை அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here