Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் 10 ஆம் வகுப்புத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

10 ஆம் வகுப்புத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

461
0
sengottaiyan
Share

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ஜூன் 1 இல் தேர்வுகள் தொடங்கும் என்று கூறியிருந்தார்.
தற்போது 4ம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல்வேறு கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இன்று முதலமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.
ஜூன் 15 – மொழிப்பாடம்
ஜூன் 17 – ஆங்கிலம்
ஜூன் 18 – கணிதம்
ஜூன் 22 – அறிவியல்
ஜூன் 24 – சமூக அறிவியல்
மேலும் ஜூன் 20ல் விருப்பப்பாடமும், ஜூன் 25ல் தொழிற்கல்வி தேர்வுகளும் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here