Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் இத்தனை கோடி பரிவர்த்தனையா! UPI மூலம்….

இத்தனை கோடி பரிவர்த்தனையா! UPI மூலம்….

326
0
UPI Payment
Share

யுபிஐ மூலம் 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக தேசிய பணப் பட்டுவாடா கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கியதால் தங்களது பண பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இதனால் கொரோனா ஊரடங்கில் மட்டும் கடந்த மாதம் அதிகபட்சமாக 134 கோடி முறை யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பணப் பட்டுவாடா கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய மாதமான ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயும், மே மாதத்தில் 2 லட்சத்து 13 ஆயிரம் கோடி அளவிற்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தேசிய பணப் பட்டுவாடா கழகம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here