Home செய்திகள் இந்தியா தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக் கியூப்ஸ் விளையாடி சென்னையைச் சேர்ந்தவர் கின்னஸ் சாதனை !

தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக் கியூப்ஸ் விளையாடி சென்னையைச் சேர்ந்தவர் கின்னஸ் சாதனை !

343
0
Share

தண்ணீருக்குள் அமர்ந்து ஆக்சிஜன் இணைப்பு கூட இல்லாமல் 2.17 நிமிடங்களில் 6 ரூபிக் கியூப்ஸ் ஒரே நேர்கோட்டில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி விளையாடக் கூடிய விளையாட்டு ரூபிக் கியூப்ஸ் இந்த விளையாட்டிற்குக் கூர்மையான புத்தி திறன் மிகவும் அவசியம். இதில் மிகக் குறைந்த நேரத்தில் அந்த ரூபிக் கியூப்ஸ் ஒரே நேர்கோட்டில் பல நிறங்களை ஒரு சேர அமைப்பது தான் இந்த விளையாட்டு.

இதற்காகப் பலர் மிகக் குறைந்த நேரத்தில் இந்த விளையாட்டை விளையாடி முடித்து சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் 5 ரூபிக் கியூப்ஸை மிகக் குறைந்த நேரத்தில் விளையாடி முடித்துக் இது வரை உலக சாதனை படைத்துள்ளனர்.

தற்போது இந்த விளையாட்டில் கின்னஸ் சாதனை படைப்பதற்காகச் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளையராம் சேகர் என்ற இளைஞர் 6 ரூபிக் கியூப்ஸை தண்ணீருக்குள் அமர்ந்து முழுவதும் மூழ்கிய படி 2 நிமிடங்கள் 17 நொடிகளில் என்ற குறைந்த நேரத்தில் விளையாடி முடித்து சாதனை புரிந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பது : தொடர் பயிற்சியும் முறையான தியானப் பயிற்சியும் எனக்கு இந்த சாதனை புரிய உதவியதாகக் கூறியுள்ளார்.

பிளாக் பேந்தர் பட நாயகன் திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி !

இவர் செய்த கின்னஸ் சாதனையை வீடியோவாக எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. கின்னஸ் உலக சாதனையின்படி, இது பிராணாயாமம் என்ற தியான முயற்சி பயிற்சிகள் மேற்கொண்டு தண்ணீருக்குள் அமர்ந்து கின்னஸ் சாதனை புரிந்ததாகவும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here