Home ஆன்மீகம் கனவில் பாம்பு வருகிறதா ! இப்படியும் நடக்கும் ஜாக்கிரதை !!

கனவில் பாம்பு வருகிறதா ! இப்படியும் நடக்கும் ஜாக்கிரதை !!

3375
0
Share

தூக்கத்தின் போது கனவில் ஏராளமான நிகழ்வுகள் வர வாய்ப்புள்ளது. அந்த நிகழ்வுகள் ஒரு சில நேரத்தில் நிஜமாகவும் ஏற்படக்கூடும் அல்லது நடந்த நிகழ்வுகள் பற்றியும் கனவில் வரக்கூடும். ஆனால் ஒரு சிலருக்கு மிருகங்கள், தெய்வங்கள் போன்ற ஏதாவது அற்புத நிகழ்வுகள் கனவாகத் தோன்றலாம்.

 

அப்படித் தோன்றும் போது அதில் ஒரு சில பயன்களும் உள்ளன, ஆபத்துகளும் உள்ளன. இது போல் பாம்பு கனவில் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

இந்தப் பாம்பு கனவில் வரும் போது கடிப்பது போன்றும், குத்துவது போன்றும், படமெடுத்து நிற்பது போன்றும், கழுத்தில் மாட்டியிருப்பது அல்லது நீங்கள் பாம்பைக் கொல்வது போன்ற நிகழ்வுகள் தோன்றலாம். இவ்வாறு தோன்றுவதன் மூலம் தங்களுக்கு என்னவெல்லாம் நடக்கும், அதிர்ஷ்டமா என்பதை விரிவாகக் காண்போம்.

பலன்கள்:

1.ஒற்றை நல்ல பாம்பு கனவில் வந்தால் விரோதிகள் மூலம் பிரச்சனை உண்டாகும்.

2.ஜோடி பாம்புகளைக் கண்டால் சகல நன்மை கிட்டும்.

3.பாம்பை உங்கள் கையால் கொல்வது போல் கனவு வந்தால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்..

4.பாம்பு தங்களைக் கடித்தது போன்று கனவு வந்தால் பணவரவு கிட்டும்.

5.பாம்பு உங்களை விரட்டும் நிகழ்வு கனவாகத் தோன்றினால் வறுமை உண்டாகும்.

6.தங்கள் காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு உண்டானால் சனி பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.

7.பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் பிடித்த சனி விலகிவிட்டது என்று அர்த்தம்.

8.கழுத்தில் பாம்பு மாலையாக விழுந்தால் பணக்காரன் ஆக வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here