Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் கொரோனா குணப்படுத்தும் மூலிகை டீ ! தமிழரின் சித்த மருத்துவம்…

கொரோனா குணப்படுத்தும் மூலிகை டீ ! தமிழரின் சித்த மருத்துவம்…

1124
0
Share

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாகக் கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாராட்டை பெற்றவர் சித்த மருத்துவர் திரு.வீரபாபு. அவர் கொரோனா வைரசைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருடன் துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்த முடியும் என்கிறார்.

அவ்வாறு அவர் கூறும் மூலிகை தேநீரில் சேர்க்கும் பொருட்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

மூலிகை தேநீர்:

சுக்கு – 100 கிராம்,
அதிமதுரம் – 100 கிராம்,
சித்தரத்தை – 30 கிராம்
கடுக்காய்த்தோல்- 30 கிராம்
மஞ்சள் – 10 கிராம்,
திப்பிலி – 5 கிராம்,
ஓமம் – 5 கிராம்
கிராம்பு- 5 கிராம்,
மிளகு – 5 கிராம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக கிடைக்கும்.

இவற்றை இடித்துப் பொடி செய்து ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்துக் கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.

இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்குப் பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.

பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த மூலிகை தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.

இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவல்லி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.

இந்த மூலிகைத் தேநீரைப் பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும். இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.

கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இதைத் தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம். இதற்கு பத்தியம் கடைபிடிக்க தேவையில்லை.

இதன் மூலம் ஒன்று உறுதியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசைத் தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது என்பது வியக்க வைக்கும் நற்செய்தி.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here