Home செய்திகள் இந்தியா சினிமாவை விட்டு விலக அனுஷ்கா முடிவா ?

சினிமாவை விட்டு விலக அனுஷ்கா முடிவா ?

541
0
Share

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2005-ம் ஆண்டு திரையுலகில் காலடி பதித்தார். தமிழில் ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான அருந்ததி படம் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ரஜினி,விஜய், அஜித்,நாகார்ஜூனா  போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார். வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி என பல படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதையடுத்து இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையையும் கூட்டினார். ஒரு படத்திற்காக ஒரு நடிகை உடல் எடையைக் கூட்டுவது இதுவே முதல் முறையாகப் பார்க்கப்பட்டது. அதன் பிறகு அவரால் அந்த உடலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை.

இதனால் முன்னணி கதாநாயகர்கள் வேறு கதாநாயகியை ஜோடி சேர்த்து, அனுஷ்காவைத் தவிர்த்து வந்தனர். அதையடுத்து அனுஷ்காவிற்குப் பட வாய்ப்பு குறைந்த வண்ணம் இருந்தது. தற்போது இவர் நடிப்பில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து லைசன்ஸ் படம் வெளிவரத் தயாராக உள்ளது.

ஆனால் ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் படம் வெளிவராமல் உள்ளது. அதே நேரம் இவர் நடித்த இந்தப் படத்தை OTT தளத்தில் வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். இப்படி இருக்க இவரை கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் ஒரு சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் அந்த படத்திலிருந்தும் இவர் ஒதுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இவருக்கு இப்போது 38 வயதாகிறது. தற்போது இவர் சினிமாவை விட்டு விலகி விடுவதாகத் தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஆனால் அனுஷ்கா இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here