Home செய்திகள் இந்தியா அரசு அலுவலகங்களில் BSNL தான் பயன்படுத்த வேண்டும் -மத்திய அரசு

அரசு அலுவலகங்களில் BSNL தான் பயன்படுத்த வேண்டும் -மத்திய அரசு

417
0
BSNL
Share

இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தொலைத்தொடர்பு துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திரைப்படம் பார்க்க வருவோருக்கு இலவச முகக்கவசம்.. திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு !

அந்த கடிதத்தில், அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தரைவழி இணைப்பு தொலைபேசி, இணையதள இணைப்பு- பிராட்பேண்ட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் என்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும், பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-ற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here