Home செய்திகள் இந்தியா 9 -ஆம் தேதி முதல் விமானச் சேவை ! முன்பதிவைத் தொடங்கிய ஏர் இண்டியா ?

9 -ஆம் தேதி முதல் விமானச் சேவை ! முன்பதிவைத் தொடங்கிய ஏர் இண்டியா ?

466
0
Air india
Share

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பயணிகளுக்காகச்  9 -ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவை தொடங்கிய ஏர் இண்டியா நிறுவனம்.  நாளை முதல் இந்தியாவிலிருந்து லண்டன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் தற்போது முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
கொரோனா தடை காரணத்தினால் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் மக்களுக்காக வந்தே பாரத் என்ற திட்டத்தின் அடிப்படையில் இவ்விமானங்கள் இயங்க உள்ளன. மேலும் வளைகுடா போன்ற நாடுகளுக்கும் விமானச் சேவை தொடங்க வாய்ப்புள்ளது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் மார்க்கத்தில் மட்டுமே விமானம் இயக்கப்படும் என்றும்  ஓ.சி.ஐ. அட்டை கொண்டவர்கள், 6 மாதம் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் வெளிநாடு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here