Home செய்திகள் இந்தியா சுதந்திரப் போரட்டத் தியாகிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை

சுதந்திரப் போரட்டத் தியாகிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை

361
0
Share

இந்திய விடுதலை போராட்ட தியாகிகளான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டுமென காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி பிரதமருக்கு முறையாகக் கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இறுதியாக மார்ச் 23, 1931 அன்று அவர்களின் உச்சபட்ச உயிர்த் தியாகத்தையும் செய்தனர். ஆகவே, அவர்களுக்கு ஜனவரி 26, 2020 அன்று பிரதமர் பாரத ரத்னா வழங்க வேண்டும்.  மேலும், பகத்சிங்கின் நினைவாக சண்டிகர் விமான நிலையத்தை அவரது பெயரில் அர்ப்பணிக்க வேண்டும். இந்தப் பணி 124 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஆன்மாவையும் தொடும்’’.

என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here