Home செய்திகள் இந்தியா திவாட்டியாவிற்கு நன்றி தெரிவித்த யுவராஜ் சிங் !

திவாட்டியாவிற்கு நன்றி தெரிவித்த யுவராஜ் சிங் !

366
0
Share

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் திவாட்டியா1 ஓவரில் 5 சிக்சர் அடித்தார். இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 224 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணி சாதனை வெற்றியை புரிந்துள்ளது. ஏனென்றால் அந்த அணியின் வீரர் ராகுல் திவாட்டியா ஒரு ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார் இதற்கு முன்பு யுவராஜ் சிங் 2007 ஆம் ஆண்டு 20 – 20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் இது பிரபல சாதனையாக இது நாள் வரை இருந்துள்ளது. இந்த சாதனையை தற்போது இவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐந்து சிக்சர்கள் மட்டுமே அடித்து ஒரு பந்தை விட்டு விட்டுவிட்டார்.

இது தொடர்பாக யுவராஜ்சிங் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :
1 ஓவரில் 5 சிக்சர் அடித்து விட்டு 1 பந்தை சிக்சருக்கு அடிக்காமல் விட்டதற்கு நன்றி என்று ராகுல் திவாட்டியாவிற்கு தெரிவித்துள்ளார். மேலும் சாதனை வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் வைத்து வாழ்த்துக்கள் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here