Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் ஊர் பெயர் மாற்றமில்லை ! அரசானையை திரும்பப் பெற்றது தமிழக அரசு..

ஊர் பெயர் மாற்றமில்லை ! அரசானையை திரும்பப் பெற்றது தமிழக அரசு..

442
0
tamilnadu
Share

தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா . பாண்டியராஜன் தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பது போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும் என்று கூறி செயல்படுத்தப்படும் என்றும், 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் முதல் கட்ட நடவடிக்கையாக பல ஆலோசனைகளுக்கு பிறகு தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள 1018 ஊர்களில் பெயர்களை தமிழில் இருப்பது போன்று ஆங்கிலத்திலும் உச்சரிக்கவும் எழுதவும் வேண்டும் என்று கடந்த 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டு இருந்தது.

mafoiஉதாரணமாக வேலூர் என்பதை ஆங்கிலத்திலும் veeloor என்றே குறிப்பிட வேண்டும். இது போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களின் பெயர்களும் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த பெயர் திருத்தத்தில் கோயம்புத்தூர், வேலூர் போன்ற இடங்களின் பெயர்கள் மாற்றத்திற்கு ஏராளமான விமர்சனங்கள் ஏற்பட்டன. தற்போது இந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here