Home செய்திகள் இந்தியா தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் (2020 – 2021)

தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் (2020 – 2021)

1124
0
Andu palan
Share

வரும் மங்களகரமான சார்வரி ஆண்டு புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை இரவு மணி 7:20-க்கு 13.4.2020 கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4-ஆம் பாதம் தனுசு ராசி, துலாம் லக்னம், நவாம்சத்தில் கும்பலக்னம் கடக ராசியில் சார்வரி ஆண்டு தொடங்குகிறது.

மேஷம் :

கூடிவாழும் மணம்கொண்ட உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். இந்த ஆண்டு முழுவதுமே சனி சாதகமான வீட்டில் வாசம் செய்வதால் வழக்குகளில் வெற்றி கிட்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் 10-ம் வீட்டில் அமர்வதால் காலநேரம் பாராமல்  உழைக்கவேண்டி இருக்கும். தேவையில்லா விஷயங்களை யவரிடமும் விவாதிக்காதீர். வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும். வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.mesham

வேலையில் பணிச்சுமை குறையும். அதிகாரிகள் அளவில் செல்வாக்கு உயரும். புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில் புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தங்களை தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தப் ஆண்டு வசதி வாய்ப்புகள் அதிகப்படுத்துவதாக இருக்கும்.

தங்களின் பரிகாரம்: செவ்வாயில் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

ரிஷபம்

நடுநிலை மாறா தங்களின் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருக்கும் இந்நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும் அளவு இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமையடைவீர்கள். ஆண்டு ஆரம்பம் முதல் 25.12.2020 வரை சனி பகவான் அஷ்டம சனியாகத் இருப்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர். கணவரின் உடல்நலனில் கவனம் அவசியம். இந்த ஆண்டு தொடக்கத்தில் குரு 9-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

Rishabamவியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து அதிக லாபம் ஈட்டுவீர். உத்தியோகத்தில் ஏராளமான வேலை பளுவால் மன இறுக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். இந்த சார்வரி ஆண்டு முதற்பகுதியில் வேலைச்சுமையைத் தந்தாலும், மையப் பகுதியிலிருந்து மகிழ்ச்சியைத் தருவதாக ஆகும்.

தங்களின் பரிகாரம்: பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஶ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.

மிதுனம் :

உங்கள் ராசியில் சந்திரன் பார்வை படும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சமயோஜிதமாகப் பேசி அணைத்து காரியமும் சாதிப்பீர். பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் நிகழ்ச்சிகள் நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். கணவர் உங்களை மீது நம்பிக்கை வைத்து பொறுப்புகளை வழங்குவார். சொந்தங்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர் வழியில் உதவிகள் உண்டு. சனியின் சஞ்சாரம் இந்த ஆண்டு முழுவதும் சரியில்லாததால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் தொடுக்காமல் இருப்பது நல்லது.

mithunamஅரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் தாவராது செலுத்துங்கள். வியாபாரத்தில் புதிய யோசனைகளைக் கையாளுவீர். ஆடி, ஆவணி மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிட்டும். வேலையாட்கள், பங்குதாரர்களில்சில மாற்றங்கள் கொண்டுவருவீர்கள். வேலையில் தங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகப் சில நடவடிக்கை எடுப்பீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பதவி உயர்வு கிட்டும், எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டு. இந்தப் புத்தாண்டு வேலைகள் அலைய வைத்தே முடிக்க வைத்தாலும், முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

தங்களின் பரிகாரம்: துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

கடகம்

பரந்த மனப்பான்மைகொண்ட தங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சார்வரி ஆண்டு பிறப்பதால் இலக்கின் பாதையில்  முன்னேறுவீர்கள். பிள்ளைகள் தங்களின் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 6-ம் வீட்டில் இருப்பதால் எதையும் சாமர்த்தியமுடன் சமாளிப்பீர். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் சுப நிகழ்ச்சிகள் மூலம் வீடு களைகட்டும். Kadagamகணவரின் வேலைச்சுமையைப் அறிந்து உதவுவீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் கிளைகள் தொடங்க வாய்ப்பு உண்டு. வேலையில் கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய சுழ்நிலை வரும். உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களுடன் இருந்த முரண்பாடுகள் அகலும். இந்த சார்வரி ஆண்டு திடீரென பெரிய  வெற்றி, புகழ் பணபலம் ஈட்டுவதாக அமையும்.

தங்களின் பரிகாரம்: சிவன் கோயிலிலுள்ள ஶ்ரீசரபேஸ்வரரைச் சென்று வணங்குங்கள்.

சிம்மம்

எதையும் வெளிப்படையாக பேசும் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் பிறக்கும். நீண்ட கால பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும். வருமானத்தை உயர்த்த முயல்வீர்கள். பிள்ளைகள் பெருமை பெற்று தருவார்கள். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளை நல்வழிப்படுத்த அவர்கள் போக்கிலே சென்று வழிநடத்த வேண்டும். 26.12.2020 முதல், வருடம் முடியும்வரை சனி 6-ம் வீட்டிலேயே இருப்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் தோன்றும்.

simmamஇந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் 6-ம் வீட்டிற்கு செல்ல இருப்பதால் செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவு சற்று மந்தமாக இருக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருங்கள். வைகாசி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை சற்று அதிகரிக்கும். பதவி உயர்வு,சம்பளம் அதிகரிப்பு நிகழும். இந்தப் புத்தாண்டு சமூக மத்தியில் மதிப்பையும் நிம்மதியையும் பெற்று தருவதாக இருக்கும்.

தங்களின் பரிகாரம்: சிவாலயம் சென்று திங்கட்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

கன்னி

தங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதனை புரிய வேண்டும்  என்ற எண்ணம் மனதில் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, சுபநிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல முடிவை தரும். சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் 4-ம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால் வீண் வாக்குவாதங்கள் வராமல்  தவிர்ப்பது நன்மை தரும்.

kanni26.12.2020 முதல் சனி 5-ம் வீட்டில் நுழைவதால் பூர்வீகச் சொத்தில் சில வில்லங்கம் ஏற்படலாம். ஆனால், சொத்து சேர்ப்பது, நகை வாங்குவது என்று தங்களின் வருமானம் உயர்வு காணும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் சரக்குகள் விற்பனை பெருமளவு உயரும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் வியாபாரம் களைகட்டும். தங்களின் சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் கிட்டும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டாகும். இந்தப் புத்தாண்டு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக இருக்கும்.

தங்களின் பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டுவாருங்கள்.

துலாம்

பரந்தவிரிந்த மனப்பாங்கு கொண்ட உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் சார்வரி ஆண்டு பிறப்பதால் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு தாராளமாக  அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிட்டும். வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள்  ஏற்பாடாகும். சிலருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 3-ம் வீட்டில் நிற்பதால், சவாலில் வெற்றியை எளிதாக பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு அடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமான முடிவு தரும். 26.12.2020 முதல் சனி 4-ம் வீட்டில் அமர்வதால் யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செப்டம்பர் மாதம் முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது நண்மை தரும்.

Thulaam 8-ம் வீட்டுக்கு ராகு வருவதால் சேமிப்புகள் குரையும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புரட்டாசி, கார்த்திகை மாதங்களில் லாபம் ஏராளமாக அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அணைத்து சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களுடன் பிரச்னைகள் அவ்வப்போது வந்து நீங்கும். இந்த சார்வரி புத்தாண்டு திடீர்ச் செலவுகளில் உங்களைச் சிக்கவைத்தாலும், வருமானத்தையும் அதர்கேற்றவாறு அதிகப்படுத்தும்.

தங்களின் பரிகாரம்: பௌர்ணமி திதி நாளில் லக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

விருச்சிகம்

எதிலும் புதுமையை எதிர்பார்க்கும் உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் சற்று  அதிகமாகும். சோர்விலிருந்த நீங்கள், பன்மடங்கு உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பூர்வீகச் சொத்தைச் சரிசெய்வீர்கள். அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் விரைவாக முடியும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சனி பகவான் 25.12.2020 வரை பாத சனியாக 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் கவனம் அவசியம் . யாரையம் நம்பி  ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

viruchagam26.12.2020 முதல் சனி பகவான் 3-ம் வீட்டுக்குள் நுழைவதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில் தான் முடியும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி ஆகிய  மாதங்களில் புதிய கொள்முதல் செய்ய முயல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலே கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சார்வரி ஆண்டு அடங்கிக்கிடந்த உங்களைப் பொங்கியெழ வைத்து அடிப்படை வசதிகளில் உயர்வு உண்டாகும்.

தங்களின் பரிகாரம்: சிவாலயத்தில் அருள்பாலிக்கும் பைரவரை வணங்குங்கள்.

தனுசு

சிரிப்பால் அனைவரையும் கவரும் உங்களின் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். முக்கிய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். சனி பகவான் 14.4.2020 முதல் 25.12.2020 வரை ஜென்ம சனியாக இருப்பதால் எதிலும் ஒரு பதற்றமான நிலை காணப்படும். 26.12.2020 முதல் பாத சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது நல்லது.

dhanusuசெப்டம்பர் மாதம் முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம் அகலும். 6-ம் வீட்டிற்க்கு ராகு வருவதால் எதிர்த்தவர்கள் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு மகிழச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அரசாங்க பிரச்சனைகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் வைகாசி மாதத்தில் நிறைவேறும். இந்தப் புத்தாண்டு அல்லலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

தங்களின் பரிகாரம்:  ஆஞ்சநேயர் கோயிலுக்கு நவமி திதியில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

மகரம்

மனசாட்சிபடி  விரோதமில்லாத உங்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் புகழ்வார். உங்களின் ராசிக்கு 12-ம் ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் அத்தியாவசிய செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். வருட ஆரம்பம் முதல் 25.12.2020 வரை விரய சனி நடைபெறுவதால் திடீர்ப் பயணங்கள், மேற்கொள்ளும் செலவுகளால் திணறுவீர்.

magaram26.12.2020 முதல் வருடம் முடியும் வரை ஜன்ம சனி தொடர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் அவசியம். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய திட்டங்கள் நிறைவேறும். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் ராசிக்குள் ஜன்ம குருவாக வருவதால் வீண் வாக்குவாதங்கள் வராமல் தவிர்ப்பது நண்மை தரும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு. இந்த சார்வரி ஆண்டு விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களை வெற்றிக்கனியைச் சுவைக்கவைக்கும்.

தங்களின் பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வணங்கவும்.

கும்பம்

வந்தாரை உபசரிக்கும் பண்பை கொண்ட தங்களின் ராசிக்கு  11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் திருப்திகரமான அளவில் இருக்கும். விருந்தினர்கள் வருவதால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் நீண்ட நாள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டாகும். பணத்தட்டுபாடு விலகும். 26.12.2020 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் அலைச்சல், வேலைச்சுமை சற்று அதிகரிக்கும்.

Kumbamஆண்டு தொடங்கும்போது குரு பகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் திடீர்ப் பயணங்கள், சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். உத்தியோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களுக்கு ஆர்வம் பிறக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியாலும் சகிப்புத்தன்மையாலும் சாதிக்க வைக்கும்.

தங்களின் பரிகாரம்: சாய்பாபா ஆலயத்துக்குச் சென்று வாருங்கள்.

மீனம்

செயற்கரிய செயல்களைச் செய்தாலும் சாதாரணமாக இருக்கும் உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த சார்வரி ஆண்டு தொடங்குவதால் சாதனைகள் தொடரும். வைகாசி, ஆவணி மாதங்களில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டு. சனி பகவான் சாதகமான வீடுகளில் செல்வதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். செப்டம்பர் மாதம் முதல் ராகு 3-ம் வீட்டுக்கு வருவதால் எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும்.

meenam பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கேது 9-ம் வீட்டில் நுழைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் செய்ய வேண்டிவரும். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து கடையை அலங்கரிப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். இந்தப் புத்தாண்டில் திடீர்த் திருப்பங்கள் இருப்பதால், சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தங்களின் பரிகாரம்: ஶ்ரீகாமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here