Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் மே 11 முதல் திரைப்பட தயாரிப்பு பணிகள் துவக்கம் ! தமிழக அரசு அறிவிப்பு ?

மே 11 முதல் திரைப்பட தயாரிப்பு பணிகள் துவக்கம் ! தமிழக அரசு அறிவிப்பு ?

484
0
EpS
Share

தமிழகத்தில் மே 11-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குத் தேவையான பின்னணி (Post production ) பணிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அதனைப் பரிசீலித்த முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டதால் ஒட்டுமொத்த திரையுலகும் முடங்கியது.
கடந்த ஒன்றரை மாதமாகப் படப்பிடிப்புகள் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பு தொடர்பான எந்த ஒரு வேலையும் பணிகளும் நடைபெறவில்லை, அதற்கு அனுமதியும் இல்லை. இதற்கிடையில், ஊரடங்கு மே 3-ஆம் தேதியோடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளுடன் அரசாங்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தது.
இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னதிரை தயாரிப்பாளர்களும், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் பாதிப்பாகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பின்னணி (Post production) பணிகளைச் செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் எனத் தென்னிந்தியத் திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே. செல்வ மணி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.
இதனால் தமிழகத்தில் மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய (Post production ) பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
* படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம் 5 பேர்)
* குரல் பதிவு ((Dubbing) (அதிகபட்சம் 5 பேர்)
* கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் ((VFX/CGI) (10 முதல் 15 பேர்)
* டி.ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் – (அதிகபட்சம் 5 பேர்)
* பின்னணி இசை (Re-Recording) – (அதிகபட்சம் 5 பேர்)
* ஒலிக்கலவை (Sound Design/Mixing) – (அதிகபட்சம் 5 பேர்)
எனவே post production பணிகள் மேற்கொள்ளும் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்குத் தேவையான அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுத் தந்து, அவர்கள் சமூக  இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளைப் பின்பற்றிப் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here