Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு கிடையாது ! முதல்வர் திட்டவட்டம்….

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு கிடையாது ! முதல்வர் திட்டவட்டம்….

484
0
EPS
Share

இந்தியா முழுவதும் மே 3 வரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இன்று முதல் சில தளர்வுகள் மேற்கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதுகுறித்து அந்தந்த மாநில அரசே முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்திய கேரளா ஒருசில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

தமிழக முதல்வர் தற்போது தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளது. இதில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வு கிடையாது, அத்தியாவசிய சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விலக்குகள் மட்டும் கடைபிடிக்க படும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளதாவது:Secrotriate

கொரோனா வைரஸ் மேலும்‌ பரவாமல் தடுக்க கடும்‌ நடவடிக்கைகள்‌ தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளதால்‌, தற்போது அமலில்‌ உள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும்‌ அனைத்து கட்டுப்பாடுகளும், மத்திய அரசு அறிவித்துள்ள மே 3 வரை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

அத்தியாவசியப்‌ பணிகளுக்கு மட்டும் ஏற்கனவே தமிழக அரசால்‌ அளிக்கப்பட்ட விலக்குகள் தொடரும்‌. கொரோனா தொற்றின் பரவுதலை மீண்டும்‌ ஆராய்ந்து, நோய்ப் பரவல் குறைந்தால்‌, சுகாதார வல்லுநர் குழுவின்‌ ஆலோசனை பெற்று,அதன் அடிப்படையில் நிலைமைக்கு தகுந்தவாறு
முடிவுகள்‌ எடுக்கப்படும்‌ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதே போன்று தெலுங்கானா முதல்வரும் மே 7 வரை ஊரடங்கு உத்தரவை நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here