Home செய்திகள் இந்தியா பவுலிங் ஜாம்பவான் மலிங்கா ஐபிஎல் தொடரிலிருந்து விலகல் !

பவுலிங் ஜாம்பவான் மலிங்கா ஐபிஎல் தொடரிலிருந்து விலகல் !

385
0
Share

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா, கடந்த 2009 முதல் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இது வரை நடந்த ஒட்டு மொத்த போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி பவுலர்களின் நம்பர் 1 ஆக இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவர் இவர் மூலம் தான் போடப்பட்டு வெற்றியும் பெற்றுத்தந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை மும்பை அணி வென்றதற்கு இவரே முக்கிய காரணமாகவும் இருந்தார். இந்த முறை UAE-யில் நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் தற்போது விளையாடமாட்டார் என்று மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் அம்பானி கூறியிருப்பதாவது :
மலிங்காவின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய அறுவை சிகிச்சை இருப்பதால் மும்பை அணிக்காக சில போட்டிகளில் மட்டும் விளையாடமாட்டார் என்று முதலில் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது தன் குடும்பத்துடன் முழுவதும் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.

தலைமுடி உதிராமல் அடர்த்தியாக உதவும் எண்ணெய் ..

இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே இவருக்குப் பதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பட்டின்சன் அனைத்து போட்டிகளிலும் விளையாட உள்ளார். மலிங்கா விலகியது எங்களுக்கு மிகப் பெரிய வருத்தமாக உள்ளது. மும்பை அணியின் மிகப்பெரிய தூணாக இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here