Home முகப்பு முக்கிய செய்திகள் அமேசான் நிறுவனத்தில் 50,000 புதிய வேலைவாய்ப்பு பண்டிகைக் கால விற்பனைக்காக…

அமேசான் நிறுவனத்தில் 50,000 புதிய வேலைவாய்ப்பு பண்டிகைக் கால விற்பனைக்காக…

338
0
Share

பண்டிகை விற்பனையை முன்னிட்டு அமேசான் இந்தியா நிறுவனம் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது. இந்தியாவில் பண்டிகை விற்பனை தொடங்குவதால் அதற்கேற்ப 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பணி அமர்த்தல்கள் இருக்கும். அமேசான் நிறுவனத்தின் அனைத்து பணிகளுக்கும் பணியமர்த்தல் இருக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

இந்தியாவில் 50 மையங்களில் இருந்து சேவைகளை அளித்து வருகிறது. நாடு முழுவதும் 150 டெலிவரி மையங்களையும், பல்வேறு வகைப்படுத்தும் மையங்களையும் வைத்து. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்க அமேசான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. “வாடிக்கையாளர்களுக்கு இலகுவான அனுபவத்தை வழங்க வேண்டும். பொருட்களை விரை வாக அனுப்புவதற்காக பண்டிகை காலத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங் காக அதிகரிக்க முயற்சிகளை எடுத்துள்ளோம். கடந்த பண்டிகை விற்பனையுடன் ஒப்பிடுகையில் வாடிக்கையாளர் சேவை மையங்களையும் மேம்படுத்தியுள்ளோம். இதற்கு ஏற்ப பண்டிகை காலத்தில் 50,000 புதியவர்கள் எங்களுக்கு பணியாற்ற உள்ளனர்“ என அமேசான் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு துணைத் தலைவர் அகில் சக்ஸேனா கூறியுள்ளார்.

அமேசான் இந்தியா நிறுவனம் `கிரேட் இண்டியன் பெஸ்டிவல் சேல்’ என்கிற விற்பனையை அக்டோபர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை முன்னெடுக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here