Home வேலைவாய்ப்புகள் அரசாங்க வேலை அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை ! தமிழக அரசு அறிவிப்பு..

அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை ! தமிழக அரசு அறிவிப்பு..

447
0
tamilnadu
Share

கொரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் மார்ச் 25 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு எந்த ஒரு தொழில்களும் இயங்க முடியாமல் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் 1 முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து மற்றும் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்களுக்கிடையே பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது அதன் பிறகு அனைத்து பணிகளும் 100 சதவீத பணியாளர்கள் செயல்படலாம் எனவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஐபிஎல் 2020 அட்டவணை இன்று வெளியீடு சென்னை – மும்பை அணிகள் முதல் போட்டியில் மோதலா ?

அதன் அடிப்படையில் அரசு அலுவலகங்களிலும் 100% பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை உள்ள அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் அரசு அலுவலர்கள் சற்று மனவருத்தத்தில் உள்ளனர்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here