Home செய்திகள் இந்தியா 90’s கிட்ஸ் அனுப்பிய மனுவைக் கவனிப்பாரா நித்தியானந்தா !

90’s கிட்ஸ் அனுப்பிய மனுவைக் கவனிப்பாரா நித்தியானந்தா !

368
0
Share

கைலாஷ் நாட்டிலுள்ள நித்தியானந்தாவிற்கு 90’s கிட்ஸ் கைலாசாவில் உள்ள பெண்களைத் திருமணம் செய்து வைக்கக்கோரி எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை நித்தியானந்தா படித்தாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாலியல் குற்றம் மற்றும் பல்வேறு குற்றங்களின் கீழ் தேடப்பட்டு வரும் சாமியாரான நித்தியானந்தா இந்தியாவிலிருந்து வெளியேறி கைலாசா என்ற தனிநாட்டை அமைத்து அந்த நாட்டிற்கு என தனி சட்ட திட்டங்களையும், வங்கியில் நாணயங்கள் என்று ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார். தற்போது இவர் தான் சமூக வலைத்தளத்தில் பயங்கர ட்ரென்ட்டாகி உள்ளார்.

இவர் அவ்வப்போது இணையத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆனால் இது நாள் வரை சைபர் கிரைம் முதல் எவராலும் இவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை. மேலும் இவருடைய நாட்டில் ஓட்டல் திறக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஒருவர் நித்தியானந்தாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அவரும் கைலாசத்தில் உணவகம் திறக்க காஞ்சிபுரம், மதுரை போன்ற மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பதிலளித்திருந்தார்.

மற்றொருவர் கைலாசாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். அதற்கும் நித்தியானந்தா பதிலளித்தார். தற்போது 90 கிட்ஸ், தமிழ்நாடு என்ற முகவரியில் தொடங்கும் ஒரு கடிதத்தை நித்தியானந்தாவிற்கு அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் 1990 ஆம் ஆண்டு பிறந்த நாங்கள் இது வரை திருமணமாகாமல் தவிக்கிறோம். ஆனால் எங்களுக்குப் பின் பிறந்த 2கே கிட்ஸ்ற்கு திருமணம் நடந்து விட்டது. எனவே தங்கள் ஆசிரமத்தில் உள்ள இளம் பெண்களை எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து கைலாசாவில் குடியுரிமையுடன், அரசு வேலையும் வழங்க வேண்டும் ‘ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு இன்னும் நித்தியானந்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் பார்த்தாரா இல்லையா என்பதும் தெரியவில்லை. விரைவில் இதற்கான பதிலை எதிர்பார்த்து நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர். இந்த கடிதம் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here