Home செய்திகள் இந்தியா கொரோனா நிதிக்கு 1.30 கோடி அள்ளி கொடுத்த விஜய்…

கொரோனா நிதிக்கு 1.30 கோடி அள்ளி கொடுத்த விஜய்…

985
0
Share

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாகக் கோலிவுட்டின் பல பிரபலங்களும், நடிகர்களும் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யிடம் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிருப்தியாக இருந்தது.
சமுதாய பிரச்சனை அல்லது எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு முதலில் குரல் கொடுப்பதும் உதவி செய்வதும் விஜய் தான்.vijay
இந்நிலையில் சற்றுமுன் தளபதி விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்  பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.5 லட்சம், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், புதுவை முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.5 லட்சம் எனத் தெளிவாக மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும் அவரது ரசிகர்கள் மூலம் அணைத்து பகுதிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையிலிருந்து சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here