Home ஆன்மீகம் சித்திரை மாதத்தில் உள்ள சிறப்புகள்.. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது !

சித்திரை மாதத்தில் உள்ள சிறப்புகள்.. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது !

1051
0
Share

  1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே  சித்திரையின் முதல் நாளாகும்.
  2. சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மா பூமியைப் படைத்ததாகப் புராணம் கூறுகிறது.
  3. சித்திரை மாதசுக்லபட்சத்தின் வெள்ளிக்கிழமைகளில் பார்வதி தாயை வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
  4. சித்ரா பவுர்ணமி தினத்தன்றுநெய் தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ரா தேவியை வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும்.
  5. சித்ரா பவுர்ணமிதினத்தன்று உப்பு சேர்க்காத உணவை ஒரு வேளை உண்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் அதிகரிக்கும் .
  6. சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் மேற்கொண்டால் காரியத்தடைகள் விலகும். அன்று பைரவருக்குத் தயிர்ச் சாதம் நைவேத்தியம் செய்தால் எதிரி பயம் அகலும்.
  7. சித்திரை மாத மூல நட்சத்திர நாளன்று லட்சுமி நாராயணரை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
  8. சித்திரை மாதசுக்லபட்சதிதி அன்று சிவ பார்வதியை வழிபட்டு தானம் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம்.
  9. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் எனப் பெயர்.
  10. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தை நேரில் பார்த்துத் தரிசித்தால் களத்திர தோஷமும், நாக தோஷங்களும் நீங்கும்.
  11. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிட்டும்.
  12. சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்தால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
  13. சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா,சித்ரா பவுர்ணமி அன்று நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  14. சித்திரை மாதத்தில் தாகத்தில் உள்ளவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்ம பாவங்கள் அகலும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிட்டும் என்று புராணம் கூறுகிறது.
  15. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது சிறந்தது.
  16. சித்திரை திருவிழா மதுரை தவிரக் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவல்லிக்கேணி, குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு,  ஆகிய ஊர்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  17. சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது அதிக நாட்டம் உடையவராகவும்,  மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்களாக இருப்பர் என்று ஜோதிட நூல்கள் கூறுகிறது.
  18. சித்திரை முதல் நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் வர கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
  19. காஞ்சியில் உள்ள சித்திரகுப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியடையும்.
  20. சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை , அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.
  21. சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு ,  மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
  22. சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் கூறுகிறது. அன்று லட்சுமி தாயைப் பூஜித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
  23. சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாக்கச் சொல்லப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பு.
  24. எம தர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.
  25. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம் விழா சித்திரை மாதத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

எந்த தினங்களில் எந்த தீபம் பலன் கொடுக்கும் ?

 

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here