Home செய்திகள் இந்தியா சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்புகிறார் ! CSK -வில் விளையாடவில்லை..

சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்புகிறார் ! CSK -வில் விளையாடவில்லை..

382
0
Share

ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் (UAE) நாட்டில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று விளையாடுவர் அதனால் அனைத்து ஐபில் அணியினரும் UAE நாட்டிற்குக் கடந்த வாரத்தில் சென்றடைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆட்ட நாயகர்களாக விளங்கும் தோனி, ரெய்னா ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த செய்தி அனைத்து ரசிகர்களுக்கும் இடியாக விழுந்தது.

அதன் பிறகு ஐபிஎல்- இல் ஆவது இந்த இரண்டு நாயகர்களும் விளையாடுவார்கள் என்று நம்பிக்கையுடன் ரசிகர்கள் மனதை ஆறுதல் படுத்திக் கொண்டனர். பின்பு சிஎஸ்கே அணியும் UAE சென்று பயிற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது சுரேஷ் ரெய்னா ஐபிஎல் -லும் விளையாடாமல் இந்தியா திரும்புகிறார் என்று செய்தி வந்துள்ளது. இந்த செய்தி டிவிட்டரில் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது :
சுரேஷ் ரெய்னா தன் குடும்ப காரணத்திற்காக இந்தியா திரும்புகிறார். மேலும் சிஎஸ்கே அணியில் விளையாடுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை சரசரவென குறைந்தது..

இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளனர். மேலும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி தற்போது மிகப்பெரிய இடியாகச் சென்னை சூப்பர் கிங்ஸ்ன் ரசிகர்களுக்கு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது…


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here