Home செய்திகள் இந்தியா திருமணமாகும் மகனுக்குத் தாய் செய்த வினோத செயல்…

திருமணமாகும் மகனுக்குத் தாய் செய்த வினோத செயல்…

426
0
twitter
Share

திருமணமாகப் போகும் தன் மகனுக்குச் சமையல் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் தன் மகனுக்காகச் சமையல் பற்றி நூதன முறையில் செய்முறை பாடம் எடுத்த தாய். தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் சமையல் கற்றுக் கொண்டனர் ஆனாலும் சமையலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத படி இன்னும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன தான் சூழலினால் ஒரு சில ஆண்கள் சமையல் கற்றுக் கொண்டாலும். சமையல் பற்றிய அறிவு பெரும்பாலான ஆண்களுக்கு இல்லாமல் தான் இருக்கிறது.

இது போல் தம் மகனுக்குச் சமையல் பற்றிய அறிவை கற்றுத் தருவதற்கு ஒரு தாய் அனைத்து மளிகை பொருட்களையும் சொல்லிக் கொடுத்துள்ளார். இருப்பினும் ஞாபகம் இருக்கிறது என்பதற்காகச் செய்முறை வடிவில் ஒரு புத்தகத்தில் சிறிதளவு பொருள்களை எடுத்து ஒட்டி அதன் கீழே ஒரு சமையல் பொருட்களின் பெயர்களையும் தெளிவாக எழுதி அதனை எவ்வாறு சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக் கியூப்ஸ் விளையாடி சென்னையைச் சேர்ந்தவர் கின்னஸ் சாதனை !

எந்த பருப்பு எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்த மகனும் கற்றுக் கொள்வார் என்பதற்காக இந்த செய்முறை பாடத்தை அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைப் புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மிகப்பெரிய பிரபலங்கள் கூட இந்த படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். பிரபல IPS அதிகாரி திபன்ஷு காப்ரா, முனைவர் சயானிகா உனியல் பாண்டா போன்ற பிரபலங்களும் இந்த பதிவினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here