Home செய்திகள் இந்தியா பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் முடங்கின ! பயனர்கள் அதிர்ச்சி…

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்கள் முடங்கின ! பயனர்கள் அதிர்ச்சி…

412
0
Share

உலகின் பிரபல சமூக வலைத்தளங்களாக விளங்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற உலகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகுச் சரி செய்யப்பட்டது.

இன்றைய இளைய தலைமுறையின் பிரபலமாக விளங்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பெரிதும் கவர்ந்துள்ளன. ஒரு நாள் முழுவதும் கூட இந்த சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். இது திடீரென 1 மணி நேரத்திற்கு எந்த வித செயலுமின்றி முடங்கியதால் பயனர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆம், இந்நிகழ்வு நேற்று அதிகாலை நடந்துள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கா ? மீண்டும் முழு ஊரடங்கா ?

நேற்று அதிகாலை 12 மணி முதல் 1 மணி வரை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் செயல்படாமல் அப்படியே முடங்கி விட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதே நிலை தான் இதனால் பயனர்கள் தங்கள் கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் செயலிழந்ததை அடுத்து அதிர்ச்சியில் மூழ்கினர். பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன் பிறகு தான் பயனர்கள் பெருமூச்சு விட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூகிள் நிறுவனத்தின் ஈமெயில், கூகிள் டிரைவ் போன்றவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here