Home ஆன்மீகம் தெய்வம் அருள்வாக்கினால் பொதுமக்கள் பீதி ! ஆம்பூரில் பதற்றம்…

தெய்வம் அருள்வாக்கினால் பொதுமக்கள் பீதி ! ஆம்பூரில் பதற்றம்…

1240
0
Ambur
Share

ஆம்பூரில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் மேல் அம்மன் வந்து பொது மக்களுக்கு மிகப் பெரிய ஆபத்து வர உள்ளது எனக் கூறியது அப்பகுதி மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பத்தில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மாதனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ராஜகுமாரி  வாணியம்பாடி அருகிலுள்ள மாராபட்டு கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ராஜகுமாரிக்கு தெய்வம் வந்துள்ளது. அப்போது வீட்டில் இருப்பவர்களுக்கு சில வாக்கு கூறிவிட்டுக் கிட்டத்தட்ட சுமார் 14  கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுச்சாலையில் நடந்தே ஆம்பூரை நோக்கி பரவசமாக ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி என்ற நாமத்தைச் சொல்லிக் கொண்டே ஒரு கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வதுபோல் தனியாக நடந்து சென்றுள்ளார்.ambur Latest News
இறுதியில் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தடியில் தெய்வம் ஆடியபடி நின்றனர்  ராஜகுமாரியிடம் அருகிலிருந்த நபர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்கள் :
இந்த கொரோனா வைரஸ் நோய் எப்பொழுது உலகத்தை விட்டு அகலும் என்று கேள்வி கேட்க அந்தப் பெண் மீது உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கூறிய அருள்வாக்கு…
பொறுத்திருந்து பார் இன்னும் ஏழு மாதம் ஆகும்.
அதன் பிறகு தான் அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் அப்பாவி உயிர்கள் பலியானது பொதுமக்கள் துன்பப்படுவது ஞாயமா ?. தெய்வீக சக்திகள் இருந்து ஏன் இந்த சோதனை என அவரிடம் கேட்க அம்மனுடைய அருள்வாக்கு…
இன்றைய உலகம் முழுவதும் மக்களிடையே அதிகம் பரவி இருப்பது பொய், ஏமாற்றுதல், திருட்டு,  கற்பழிப்பு, சிசு கற்பழிப்பு, ஏமாற்று வேலை. அளவுக்கு மீறிய பேராசை இதுபோன்று தவறுகளும் அட்டூழியங்களும்,  அராஜக கொடுமைகளும், தலை விரித்து ஆடுகிறது. மனிதர்களாகிய நீங்கள் எங்கள் சினத்தைச் சீண்டி விட்டீர்கள் மனிதர்களைத் திருத்தவே இந்த நோய்  உலகத்தின் பரம்பொருள் ஈசன் என் அய்யன் சிவபெருமானால்  உருவாக்கப்பட்டது.
இதனால் தான் உலகத்தில்  எங்கும் எங்களுக்கு யாருக்கும் எவ்வித பூஜையும் இல்லாமல் இருக்கிறோம். இதுவும் என் அய்யன் ஈசன் பரம்பொருள் பரமேஸ்வரன் உத்தரவே. இவ்வுலகத்தில் மனிதர்கள் செய்யும் பூஜை தற்போது வேண்டாம் என் ஈசன் கட்டளை.
மக்கள் திருந்தவே இந்த நோய் நாடகம்.
இந்த நோய் மூலம் உலகத்தை சீர்படுத்தி மனிதநேயத்தைக் காக்கப்படும். மேலும் ஏழு மாதம் வரை இவ்வுலகில் எவராலும் இதற்கு மருந்து கண்டறிய இயலாது. இன்னும் ஏழு மாதத்திற்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் இக் கொடுமையை அனுபவித்தே ஆக வேண்டும். உலகம் முழுவதும் ஏழு மாதங்களுக்கு கடும் சோதனை துன்பங்கள் நடக்கும். இதுவே என் பரம்பொருள் ஈசனின் கட்டளை.
என் ஐயன் ஈசன் பரமேஸ்வரனின் உத்தரவுப்படி கலியுக உலகத்தில் இந்த வைரஸ் தோன்றியது. உலகம் முழுவதும் மக்களுக்குப் பேராசை கட்டுப்பட வேண்டும், மக்கள் திருந்த வேண்டும் அதற்காகவே என் ஈசன் படைத்துள்ளார் எனக்  கூறியது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
Ambur Newsமேலும் குறிப்பாக அந்தப் பெண் மீது தெய்வம் வந்து பேசும் போது  யாரும் பிடிக்கக்கூடாது. யாரும் என்னைத் தொடக் கூடாது இந்த பெண் மீது நான் இருக்கிறேன் இந்த பெண்ணுடலை யாரும் தொடக் கூடாது. அந்தப் பெண் சக்தியைக் கடைசிவரை யாரும் தொடமுடியவில்லை தொட்டு உதவியும் செய்ய முடியவில்லை மிகுந்த கட்டுப்பாட்டுடன் மக்கள் தொடாமல் தெய்வம் மலை ஏறியது.
இதிலும்
விலகி இரு
வீட்டில் இரு
என்ற நிலையைப் பெண் சக்தி அங்குள்ள மக்களிடம்  செயல்படுத்தியது.
இதை கேட்டதும் அந்தப் பெண் சக்தியிடம்  உண்மையான அம்மன் சக்தியின் வாக்கு என உண்மையில் உறைந்து போனோம்  என மக்கள் கூறுகின்றர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here