Home ஆன்மீகம் புற்றுநோயைக் குணப்படுத்தும் பாகம்பிரியாள்… அபூர்வ நிகழ்வு !

புற்றுநோயைக் குணப்படுத்தும் பாகம்பிரியாள்… அபூர்வ நிகழ்வு !

489
0
Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூரில் குடிகொண்டுள்ள பாகம்பிரியாள் அம்மனை வேண்டி வழிபட்டு வந்தால் தீர்க்காயுள் கிட்டுமாம். இங்குள்ள ஈஸ்வரனுக்கு ‘பழம் புற்றுநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘பாகம்பிரியாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள நாயகியான பாகம் பிரியாள் நீண்ட நாள் ஆகியும் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ள புற்றுநோய்க்கு மருந்தளிக்கும் நாயகியாகத் திகழ்கிறாள். தாயின் சன்னிதியில் தரும் தீர்த்தத்தைப் பருகினால், புற்றுநோயானது தீரும் என்று நம்புகின்றனர். உயிர் பயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடன் செல்கின்றனர்.

இந்த தலத்தின் விருட்சமாக உள்ள அரசமரத்தை பிரதக்ஷணம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று நம்புகின்றனர். மேலும் இந்த ஊர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக எண்ணி, தம் மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இதே போல் இந்த ஊர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலும் சிறப்புமிக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here