Home செய்திகள் இந்தியா மாயமான 5 இளைஞர்கள் ! சீனா இந்தியாவிடம் ஒப்படைக்கிறது…

மாயமான 5 இளைஞர்கள் ! சீனா இந்தியாவிடம் ஒப்படைக்கிறது…

327
0
Share

சில தினங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லைப் பகுதியில் 5 இளைஞர்கள் மாயமானதாகத் தேடப்பட்டு வந்தனர். தற்போது அந்த இளைஞர்கள் சீனாவில் இருப்பதாகவும், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

அருணாசல் பிரதேஷ் சுபன்சிரி மாவட்டத்திலுள்ள சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயினர். அவர்களை இராணுவத்தினர் தேடி வருகின்றனர். பின்பு அவர்கள் வழிதவறிச் சீன எல்லைக்குள் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு சிலர் இவர்களைச் சீன ராணுவம் பிடித்து வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக நம் நாட்டு ராணுவத்தினர் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்குச் சீன ராணுவம் பதில் அனுப்பியுள்ளது.

தாங்கள் தேடி வரும் 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சீன ராணுவம் தங்களிடம் ஒப்படைக்கும் என்றும் பதில் அளித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜீ நம் அதிகாரிகள் விரைவில் 5 வாலிபர்களையும் மீட்டு வருவர் என்று கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 20 சதவீத கட்டண சலுகை…

இந்நிலையில் 5 இளைஞர்களையும் சீன ராணுவம் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. வச்சா அருகே கிபித்து எல்லைப்பகுதியில் சீன ராணுவம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here