Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் அனைத்து தலைமுடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வா ? இதைச் செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..

அனைத்து தலைமுடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வா ? இதைச் செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்..

344
0
Share

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என இருவருமே நன்கு அடர்த்தியான தலை முடியை விரும்புகின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்குத் தலை முடி உதிர்தல் மற்றும் தலை முடியில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் அவர்கள் மிகுந்த வருத்தம் அடைகின்றனர். இதற்கு வேலைப் பளு, மாசற்ற சுற்றுச்சூழல், மன உளைச்சல் போன்ற காரணங்களால் முடி உதிர்தல் ஏற்படுகிறது.

எனவே இது போன்ற தலைமுடி பிரச்சினை காரணமாக ஆண்களும், பெண்களும் இளம் வயதிலேயே வழுக்கை விழும் சூழல் உருவாகிறது. இளநரையும் வருகிறது. இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கவும் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், பாலமாகவும், உறுதியுடனும் வளர ஒரு சிறு பேக் உள்ளது. இதைச் செய்தால் போதும் தலை முடி அடர்த்தியுடனும், உறுதியுடன் வளரும் அதை என்னவென்று கீழே பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :
செம்பருத்தி பூ இலைகள் = 10
கறிவேப்பிலை = ஒரு கையளவு
மருதாணி இலை = ஒரு கையளவு

செய்முறை :
செம்பருத்திப் பூவின் இலையையும் கறிவேப்பிலை, மருதாணி இலைகளையும் ஒன்றாகச் சேர்த்து லேசான தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இது ஒரு பேஸ்ட் போன்று மாறிவிடும். இதனைத் தலையில் போட்டு 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து பிறகு தலை குளிக்க வேண்டும்.

இதை வாரமிரு முறை செய்து பாருங்கள் தலைமுடி கட்டுக்கடங்காமல் மளமளவென வளரும் அது மட்டுமில்லாமல் இளநரை, அடர்த்தி குறைவு, பொடுகுத் தொல்லை போன்ற எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here