Home செய்திகள் இந்தியா இந்திய எல்லையில் தாக்குதல்! இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…

இந்திய எல்லையில் தாக்குதல்! இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…

466
0
Indian Army Ladakh
Share

இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் இந்த செய்தியை இந்திய ராணுவமே உறுதிப்படுத்தியுள்ளது…

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு சண்டை ஏற்படும் போது இரு தரப்பிலும் காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்படும். ஏனென்றால் இந்திய எல்லையில் நிலைகளைக் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவிடும்.army-ladakh

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் சுந்தர்பானி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் நேற்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இதற்குச் சரியான பதிலடியை இந்திய இராணுவம் கொடுத்தது. ஆனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். அதில் ஒருவரான நாயக் அனீஸ் தாமஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவலை ராணுவ தற்போது வெளியிட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here