Home செய்திகள் இந்தியா இந்தியா – ஜப்பான் கூட்டு ! எதில் தெரியுமா ?

இந்தியா – ஜப்பான் கூட்டு ! எதில் தெரியுமா ?

350
0
Share

சீனா நம் நாட்டில் சமீப காலமாக இணைய வழித் தாக்குதல்களை நடத்துவது அதிகரித்துக் வருகிறகி. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசால் சீனாவிற்க்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திறந்த நம்பகமான, நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்குவதில், இந்தியாவும் ஜப்பானும் உறுதியாக உள்ளது. இதன் முதல் முயற்சியாக இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா – ஜப்பான் இடையே ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சோளிங்கர் மலைக்கு ரோப் கார்… விரைவில் பணிகளை முடிக்க மக்கள் கோரிக்கை !

இந்த ஒப்பந்தம் மூலம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்கங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பு பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here