Home ஆன்மீகம் எதிரிகளிடமிருந்தும், துஷ்ட சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் துர்க்கை அம்மன் மந்திரம்…

எதிரிகளிடமிருந்தும், துஷ்ட சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் துர்க்கை அம்மன் மந்திரம்…

1244
0
Share

பொதுவாக அனைவருக்குமே வாழ்வில் பிரச்சனை என்பது இருக்கும். அது எந்த வகையில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு எந்த வேலை தொடங்கும் போதும் பிரச்சினை நேரிடலாம். இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து நாம் முன்னேற வேண்டிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்காக எதிரிகளிடமிருந்தும் வரும் பிரச்சினைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க நல்வழியில் வாழ்க்கை பயணிக்கத் துர்க்கை அம்மனின் போற்றி மந்திரம். இதைச் சொல்லி வழிபாடு செய்து வந்தாள் ஏற்படும் தடங்கல்கள் விலகி எண்ணியபடியே வெற்றி நிச்சயம் கிட்டும். அதிலும் முக்கியமாக வெள்ளிக்கிழமைகளிலும் மந்திரத்தைச்
சொல்லி வழிபாடு செய்து வந்தாள் கூடுதல் பாக்கியம் அடைவீர்கள்.

துர்கை அம்மன் என்பது யாராலும் சாய்க்க முடியாத வெற்றியை அள்ளித் தருபவள் அம்மன் வழிபாடு செய்வோருக்கும் இதே போல் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் தீர்வு கொடுத்து தாங்கள் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்கத் தேவையான ஆற்றலையும், திறனையும் அள்ளித் தருபவள் என்று அர்த்தம்.

துர்க்கை அம்மனின் போற்றி மந்திரம் :
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்

மந்திரத்தின் பொருள் :
காத்யாயனய என்றாள் மகரிஷிக்கு மகளாகப் பிறந்தவளே எனவும், கன்யாகுமாரி என்றால் இளம் குமாரியாகத் திகழ்பவளே எனவும் உன்னை மன்றாடி வணங்கும் என் மனக் குழப்பத்தை நீக்கி, அறிவையும், மனதின் பலத்தையும் பெருக்க வேண்டும் என்று உன் பாதம் பணிகிறேன் என்பதாகும்.

இந்த மந்திரத்தைச் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்மனுக்கு உகந்த நேரத்தில் உடல் குளித்து சுத்தத்துடனும், மனத் தூய்மையுடனும் 108 முறை அம்மன் போற்றி மந்திரத்தைச் சொல்லி வந்தால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும். மனக் கவலைகளும் வரும் பிரச்சனைகளும் அகலும். ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் தீர்வு கண்டு முடிப்பீர்கள்.

அது மட்டுமில்லாமல் தங்களுக்கு கேடு விளைவிக்கும் துஷ்ட சக்திகளான பில்லி, சூனியம் செய்வினை போன்றவற்றையும் தம்மை தாக்காது பாதுகாக்கும் சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here