Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் ஆப்பிளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா ?

ஆப்பிளை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா ?

451
0
Share

ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதில் விஷத்தன்மை உள்ளது என்று பல்வேறு கூற்று பரவி வருகிறது. இதனால் சிலர் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகின்றனர். உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை வாய்ந்ததா..? ஆப்பிளை எப்படி சாப்பிடுவது?

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்து விடலாம் என்று சொல்வார்கள். அப்படி பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதில் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்து தான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். மேலும் விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் அதிகமுள்ளது. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நம் உடலின் செரிமானப் பிரச்னை இருக்காது. மேலும் அதே சமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

ஆப்பிளில் இது போல் எண்ணற்ற ஆரோக்கியம் அடங்கியுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம். இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைப்பது, மேலும் அதன் தோலை பளபளப்பாக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் பரவலாக கூறப்படுகிறது.

இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் நச்சு பொருள். எனவே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை போன்ற உடல் உபாதைகளை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து பல்வேறு நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில எளிய டிப்ஸுகளும் உண்டு.

பீரங்கிகளை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த நாக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி…

அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பார்க்க வேண்டும். வீட்டில் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. எனவே சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.

இவ்வாறு மெழுகு நீக்கி உடலுக்கு சத்தான ஆப்பிளை உண்ணலாம்..


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here