Home செய்திகள் இந்தியா சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் CSK கிரிக்கெட் போட்டி…

சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் CSK கிரிக்கெட் போட்டி…

437
0
Share

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் CSK அணி பயிற்சி கிரிக்கெட் விளையாடவுள்ளது. இந்த போட்டி 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்னும் நடத்தப்படவில்லை. பல கட்டங்களாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐபிஎல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதிகாரப்பூர்வமாகச் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10 வரை இந்த போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வீரர்கள் வரும் 21 தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் CSK அணியினர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த பயிற்சி ஆட்டத்தில் CSK வின் முக்கிய ஆட்ட நாயகர்களான டோனி, ரெய்னா, ஜடேஜா, அம்பாதி ராயுடு, முரளி விஜய், அசீப், சாய் கிஷோர் ஆகியோர் பங்கெடுக்கின்றனர். பயிற்சியில் ஈடுபடும் முன்பு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் நெகட்டிவ் வந்தவர்கள் மட்டுமே பயிற்சி மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி CSK அணியினர் சென்னை சேப்பாக்கத்திற்கு வர உள்ளனர். 15ஆம் தேதி முதல் பயிற்சி மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்பு சென்னையில் இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின்பு தனிமைப்படுத்தப்பட உள்ளதால் வீரர்கள் தற்போது பயிற்சி மேற்கொண்டால் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகின்றனர். இது கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here