Home செய்திகள் கொரோனா சென்னையில் மீண்டும் 1000 பேரைத் தாண்டிய கொரோனா பாதிப்பு! மேலும் 100க்கும் அதிகமான பலி எண்ணிக்கை..

சென்னையில் மீண்டும் 1000 பேரைத் தாண்டிய கொரோனா பாதிப்பு! மேலும் 100க்கும் அதிகமான பலி எண்ணிக்கை..

329
0
covid 19
Share

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறைந்த வாரில்லை. சென்னையில் கடந்த சில நாட்களாக 1000 ற்கும் குறைவான பாதித்தவர்கள் எண்ணிக்கை அளவிலேயே இருந்தது. ஆனால் இன்று மீண்டும் 1000 அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்றிற்கு 5,890 பேர் ஆளாகியுள்ளனர். இதனால் தமிழகத்தின் ஒட்டு மொத்த கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 326,245 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய 5,890 பேர் கொரோனா பாதிப்பில் 1187 பேருக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னைவாசிகள் விழிப்புணர்ச்சி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 117 பேர் இந்த கொரோனா நோய்க்குப் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து கொரோன வைரஸ் பலி எண்ணிக்கை 5514 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்னும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது பெரும் வேதனைக்குரிய ஒன்றாகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here