Home செய்திகள் இந்தியா அயோத்தி வழக்கு படமாகிறது ! கங்கனா ரனாவத் இயக்குகிறார்… 

அயோத்தி வழக்கு படமாகிறது ! கங்கனா ரனாவத் இயக்குகிறார்… 

497
0
kangana ranut
Share

பிரபல பாலிவுட் நடிகையும் இயக்குநரும் எனப் பல வேலைகளில் ஹிட்டடித்த கங்கனா ரனாவத் அயோத்தி வழக்கைப் பின்னணியாக வைத்துப் படமாக்குகிறார்.
தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கி அதில் நடித்தும் இருந்தார் மணிகர்ணிகா என்ற பெயரில் அந்த படத்தைத் தயாரித்தார். அவரே ஜான்சிராணி ஆகவும் நடித்திருந்தார்.
இப்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில்  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது அவருடைய அடுத்த படத்தை பற்றி  அறிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தையும், ராமர் கோவில் பிரச்சனையையும் குறித்து வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதை ஒரு காதல் பின்னணியில் வைத்து படமாக்கலாம் என்று கங்கனா ரனாவத் முடிவெடுத்துள்ளார்.
அந்த படத்திற்கு அபராஜிதா அயோத்தியா எனப் பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே கங்கனா இயக்கிய மணிகர்ணிகா படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதிய கே.வி. விஜயேந்திர பிரசாத் தான் இந்த படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். இவர் பிரபல இயக்குநர் இராஜ மௌலியின் தந்தை ஆவார். பாகுபலி கதையை எழுதியவரும் இவரே.
இதுதொடர்பாக கங்கனா தெரிவித்திருப்பதாவது :
அபராஜிதா அயோத்தியா படத்தைத் தயாரிக்கத் தான் நினைத்தேன். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட் படம். ஆனால் நான் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறினார்கள். எனக்கும் அது சரி என்று தோன்றியது.
இந்த படம் சர்ச்சைக்குரிய கதையை அம்சமாகக்  கொண்டிருக்காது. ஒற்றுமையை மையமாக வைத்து இயக்க உள்ளேன். அதேபோல் இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தெய்வத்தின் கதையாகப் பார்க்கிறேன்.
இவ்வாறு கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here