Home செய்திகள் இந்தியா 74வது சுதந்திர தின விழா உரை ! சீனா, பாகிஸ்தானுக்குப் பதிலடி…. பிரதமர் மோடி...

74வது சுதந்திர தின விழா உரை ! சீனா, பாகிஸ்தானுக்குப் பதிலடி…. பிரதமர் மோடி ஆவேச பேச்சு..

447
0
Share

74 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார் .நாட்டின் வளர்ச்சி குறித்தும் பாதுகாப்பு குறித்தும் பேசியுள்ளார்.

74வது சுதந்திர தின விழா உரையில் பேசிய நரேந்திர மோடி கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஜூன் மாதம் இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து இந்திய ராணுவத்தின் பெருமை குறித்தும் பாராட்டியுள்ளார். இனி இந்தியாவைப் பற்றி அனைத்து நாடுகளும் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் என்று சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நாட்டிற்காக உயிரிழந்த 20 ராணுவ வீரர்களுக்கு செங்கோட்டையில் வணக்கம் செய்தார். நம் நாடு பயங்கரவாதமாக இருந்தாலும் சரி நாட்டின் விரிவாக்கமாக இருந்தாலும் சரி இந்தியா இரண்டையும் எதிர்த்து இதுநாள் வரை போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here