Home செய்திகள் கொரோனா தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி..

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி..

376
0
Share

கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவின் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வு மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாகப் பல கட்டங்களாக பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ரத்து செய்யப்பட்டது.

மாணவர்களுக்குக் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், வருகைப்பதிவேடு அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்தது. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டது. மாணவர்கள் மொபைல் எண்ணுக்கு நேரடியாகத் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை வெளியிட்டது.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

மாணவர்கள் தங்கள் மேற்படிப்பிற்குத் தேவையான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டும் மறு கூட்டல் மதிப்பெண் இயலாது என்பதால் மதிப்பெண் தொடர்பான புகார்களைத் தலைமையாசிரியர்கள் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here